தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி... சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்!

 
விநாயகர்

ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஞானம், அறிவு, செல்வத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானை சதுர்த்தியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

விநாயகர்

மேலும், பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்களின் பார்வைக்காக வைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி பின்னர் அவற்றை ஆறு, கடல் உள்ளிட்ட நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வர். இதற்காக, தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்புப் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6 அங்குலம் முதல் 9 அடி வரை உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் சுண்ணாம்பு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். சுற்றுச்சூழலைப் பாதிக்காத நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் சிலைகள் மீது வண்ணம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன.

விநாயகர்

இது குறித்து ஆண்டுதோறும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வரும் அமைப்பாளர் ராகவேந்திரா கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி விசர்ஜனம் செய்வோம்’ என்றார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?