விநாயகர் சதுர்த்தி... இன்று இரவு நெல்லை வரை சிறப்பு ரயில் இயக்கம்!
நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி இன்றிரவு நெல்லை வரையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி பயணிகளின் வசதிக்காக மைசூரு-நெல்லை இடையே ஒருமுறை இயங்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

மைசூரு-நெல்லை சிறப்பு ரயில் (வண்டி எண்: 06241) இன்று 26ம் தேதி இரவு 8.15 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு நாளை காலை 10.50 மணிக்கு நெல்லையை சென்றடையும். அதே சமயம் மறுமார்க்கமாக நெல்லை-மைசூரு சிறப்பு ரயில் (06242) நாளை 27ம் தேதி மதியம் 3.40 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.50 மணிக்கு மைசூருவை வந்தடையும்.

இந்த ரயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, கெங்கேரி, கே.எஸ்.ஆர். பெங்களூரு, பெங்களூரு கன்டோன்மென்ட், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
