கூட்டு பாலியல் பலாத்காரம்.. 10 வயது சிறுமியை கொடூரமாக கொன்ற இருவர் கைது.. அதிர்ச்சி பின்னணி!

 
பாலியல் துன்புறுத்தல்

டெல்லியில் உள்ள நரேலா பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி நேற்று மதியம் வெளியே சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால், சிறுமியைக் காணாததால், நரேலா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில் நரேலா காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது.

போலீஸ்

அதில், சிறுமியின் சடலம் ஒரு இடத்தில் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அங்கு சென்றபோது, ​​காணாமல் போன சிறுமி தலையை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதன்பின், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

தற்கொலை

ராகுல் (20) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ராகுல் மற்றும் அவரது நண்பர் தேவ்தாக் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை இருவரும் கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web