இறந்தவர்களுக்கு “பேய் திருமணம்” ... வினோத பழக்கத்தை கடைப்பிடிக்கும் விசித்திர கிராமம்!

 
பேய் திருமணம்

 எத்தனை தொழில்நுப்டம் நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் சில மூடப்பழக்க வழக்கங்கள் வினோத நடைமுறைகள் இன்னும் பல பகுதிகளில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் கடலோர மாவட்டங்களில் துளு மொழி பேசும் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுடைய குடும்பத்தில் திருமணம் ஆகாமல் இளம்பெண்  உயிரிழந்துவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வினோத முறையை கடைபிடிக்கின்றனர். அதன்படி திருமணமாகாமல் ஒரு பெண் உயிரிழந்து விட்டால் அந்த பெண்ணுக்கு திருமணமாகமல் உயிரிழந்த  மற்றொரு இளைஞரை  திருமணம் செய்து வைக்கின்றனர்.  இதற்காக அவர்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கின்றனர்.

பேய் திருமணம்

  அதன்படி திருமணம் செய்யாமல் இருந்த ஆண் வீட்டார் மணமகள் வீட்டை தொடர்பு கொண்டு பேசுகின்றனர்.  திருமணத்திற்கு வேண்டிய ஜவுளி உட்பட அனைத்து பொருட்களும் வாங்கப்படுகிறது.   இறந்த பெண்ணுக்கும் இறந்த இளைஞருக்கும்  திருமணம் செய்து வைக்கின்றனர். இதனை அவர்கள் குலேய் திருமணம் அதாவது பேய் திருமணம் என அழைக்கின்றனர்.  இதன் மூலம் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதாக நினைக்கிறார்கள். இதே போன்ற ஒரு சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள புத்தூர் பகுதியில் தற்போது நடந்துள்ளது. அங்கு துளு மொழி பேசும் ஒரு தம்பதியின் மகள் கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக சிறுமியாக இருக்கும் போது உயிரிழந்து விட்டார்.

பேய் திருமணம்


தற்போது அவர்கள் தங்கள் பெண்ணுக்கு மணமுடிக்க வரன் தேடி செய்தித்தாளில்  விளம்பரம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு ஏற்ற வரன் கிடைத்த நிலையில்   இறந்த வாலிபரின் பெற்றோரும் இறந்த பெண்ணின் பெற்றோரும் இணைந்து பேய் திருமணத்தை செய்து வைத்தனர்.  இதன்மூலம் இறந்த ஆன்மாக்கள் அமைதி பெறும் என்பது அவர்கள் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் நம்பிக்கை.  இவர்கள் திருமணம் செய்வதற்கு முன்பாக இறந்த மணப்பெண்ணுக்கும் இறந்த இளைஞருக்கும்  திருமண பொருத்தம் இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள். அப்படி இருந்தால் மட்டும்தான் இந்த திருமணத்தை நடத்துவார்கள். மேலும் இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web