இளம்பெண் சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க அனுமதி... தேவசம்போர்டு அறிக்கையில் மாற்றம்!
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மலையேறி சென்று ஐயப்பனை தரிசிக்க அனுமதி கிடையாது. தற்போது பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுக்களின் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 2019ல் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க தடை இல்லை என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற தேவசம் போர்டின் அறிக்கையில் மாற்றம் செய்வது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்” எனக் கூறியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
