தற்கொலை செய்துகொண்ட காதலி .. காரணமான காதலனை காரில் கடத்திச் சென்ற குடும்பத்தினர்!

 
முகமது அலி

சென்னை கொட்டிவாக்கம் நேருநகர் 2வது மெயின் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிரைவர் முகமது அலி (26) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் சிலர் முகமது அலியை காரில் கடத்திச் சென்றனர். அவருடன் வந்த மற்றொரு நபர் இதைப் பார்த்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில், தரமணி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, கடத்தப்பட்ட கார் குறித்த விவரங்களை விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் வாகனத்தை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் அருகே ஓங்கூர் சுங்கச் சாவடியில் கடத்தப்பட்ட இளைஞர் முகமது அலி மீட்கப்பட்டார்.

அதன்பின், அவரை கடத்திய கள்ளக்குறிச்சியை சேர்ந்த சாமுண்டி (75), ஆறுமுகம் (43), அருள் (26), ரவிசங்கர் (24), சண்முகம் (50), சிலம்பரசன் (33) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முகமது அலி தனது வளர்ப்பு மகளின் தோழியான ரங்கீலா (25) என்பவரை கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக கடந்த 13ம் தேதி ரங்கீலா தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ரங்கீலாவின் குடும்பத்தினர் சென்னையில் வேலை பார்த்து வந்த முகமது அலியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரையும், மீட்கப்பட்ட நபரையும் தரமணி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web