காதலன் வீட்டை கொளுத்திய காதலி வீட்டார்... பகீர் !!

 
அட்சயா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை  வட்டம் பகுதியில் வசித்து வருபவர்   சிவா. இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிகளுக்கு அட்சயா  என்ற மகள் .   இருவரும், அதே பகுதியில் வசித்து வரும்   முருகன் என்பவரது மகன் விஜய்யும்  ஒரு வருட காலமாக காதலித்து வந்தனர்.  பெற்றோர்கள் காதலர்களை கண்டித்துள்ளனர். 
 அட்சயா
இதன் காரணமாக இருவரும் விடியற்காலை 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.  பெண் வீட்டார் பெண்ணை பல்வேறு இடங்களிலும் தேடிய பிறகு தான் தெரிந்தது  காதலர்கள் இருவரும் தப்பி ஓடியது .  ஆத்திரமடைந்த பெண் வீட்டார் இன்று விஜய்யின் வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர்.  இதனால் வீடு மளமளவென தீப்பற்றி எரிந்தது.

போலீஸ்

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை காவல் ஆய்வாளர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். 
மேலும் பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்த அட்சயாவின் தந்தை சிவா மற்றும் அண்ணன் அழகேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய காரணத்தால் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டை பெட்ரோல் ஊற்றி கொளுத்திச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web