உஷார்... முகவரி கேட்பது போல் நடித்து இளம்பெண்ணிடம் 7½ தங்க செயின் பறிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி பிருந்தா தேவி (29). இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்து உள்ளார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் பிருந்தா தேவியிடம் முகவரி கேட்டுக் கொண்டிருந்தார்.
அவருக்கு பிருந்தா தேவி பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே திடீரென அந்த நபர், பிருந்த தேவியின் கழுத்தில் அணிந்திருந்த 7½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
அப்போது தான் அந்த மர்ம நபர் முகவரி கேட்க வரவில்லை என்றும் முகவரி கேட்பது போல் நடித்து நகையை பறிக்க வந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பிருந்தா தேவி திருடன், திருடன் என்று கூச்சல் போடவும் அருகில் உள்ளவர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த நபரைத் துரத்தி சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் தங்க நகை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!