ஆப்ரேஷன் சிந்தூரில் களப்பணியாற்றிய தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்!

 
தமிழக வீரர்
 


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள்  தாக்குதல்  நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆபரேஷன் சிந்தூர்

இதற்கு பழிவாங்கும் வகையில் இந்திய ராணுவம் மே 7ம் தேதி “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டன. பல முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதுடன்   பல பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதையடுத்து 4 நாட்கள் இந்தியா–பாகிஸ்தான் இடையே கடும் மோதல்கள் நடந்தன.

சிந்தூர்
அந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் அனுப்பிய நவீன டிரோன்களை செயலிழக்கச் செய்து வீழ்த்திய சிறப்பு கமாண்டோ வீரர் கந்தன், தனது வீரத்திறனால் இந்திய ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தார். இதற்காக அவருக்கு சுதந்திர தின விழாவில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களால் மிக உயரிய வீரதீர செயலுக்கான தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி கிராமத்தில் வசித்து வரும்  தங்கவேல்-லட்சுமி தம்பதியின் மகனான கந்தனுக்கு, அவரது சொந்த ஊர் மக்கள் மற்றும் ஊராட்சி சங்க தலைவர் பாக்யராஜ் உட்பட பலர்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?