இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகின. இதனையடுத்து பொறியியல் , கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இளநிலை பட்டப்படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 6ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இதன்படி 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர். இந்த மாணவர்களின் தரவரிசை பட்டியல் கல்லூரிகளுக்கு இன்று மே 27ம் தேதி திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக, மாற்றுத்திறனாளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் ஆகியோருக்கான சிறப்பு ஒதுக்கீடு கலந்தாய்வுகள் மே 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்பிறகு, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூன் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையிலும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலும் நடத்தப்பட உள்ளது. கலந்தாய்வுகள் முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை மாதம் 3ம் தேதி தொடங்குகின்றன. கடந்த 2023-24ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
