அரசு பேருந்து நடத்துனருக்கு தர்ம அடி.. பள்ளி மாணவியின் சகோதரர்கள் வெறிச்செயல்!

 
கேரள பஸ்

கேரள மாநிலம் கோட்டயம் அருகே கோட்டயம்-மாளிகடவு மார்க்கத்தில் கடந்த 4ம் தேதி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவ, மாணவியருக்கு பள்ளி சீருடை மற்றும் சலுகை அட்டை இல்லாததால், சலுகை கட்டணத்தில் டிக்கெட் வழங்க முடியவில்லை என கண்டக்டர் பிரதீப் தெரிவித்தார். இதனால் ஒரு மாணவிக்கும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பஸ்சில் இருந்து இறங்கிய மாணவி நேராக வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், தனது நண்பர்களுடன் சென்று திரும்பி வந்து கொண்டிருந்த அதே பஸ்சை வழிமறித்து அதில் ஏறினார்.

பின்னர் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் பிரதீப்பை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடியது. இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து சிங்கவனம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாணவியின் சகோதரர் உள்ளிட்ட இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தார். அதே நேரத்தில் மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட நடத்துனர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web