உள்ளூரிலேயே அரசு வேலை ... கிராம உதவியாளர் பணியிடங்கள் விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 கிராம உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் : 16
நிலக்கோட்டை தாலுகா - 11
திண்டுக்கல் கிழக்கு வட்டம்: 03,
வேடசந்தூர் -03 என
சம்பளம்: ரூ. 11,100 – 35100/-
கல்வி தகுதி; 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 21 வயது முதல் 32 வரை,

விண்ணப்பிக்கும் வட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். காலிப்பணியிடம் உள்ள கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள்
தமிழில் பிழையின்றி எழுத படிக்க தெரிந்து இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை திண்டுக்கல் மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களுடன் இருப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், கல்வி சான்றிதழ் நகல்களை கட்டாயம் இணைக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவகலத்திற்கு தபாலிலோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
தேர்வு முறை: எழுத்து திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் எந்தெந்த கிராமங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன என்ற விவரம் இடம் பெற்றுள்ளன.
கூடுதல் தகவல்கள் மற்றும் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய: https://dindigul.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
