இன்று தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம்...!!

 
கிராம சபை கூட்டம்

இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட நாட்களில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று உள்ளாட்சிகள் தினம் அனுசரிக்கப்படுவதை அடுத்து தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. கிராம சபை கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான நாட்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியக் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உலக நீர் நாள் மற்றும் உள்ளாட்சி தினம்  என 6 சிறப்பு நாட்களின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிராம சபை  கூட்டப்பட்டு வருகிறது.

கிராம சபை கூட்டம்

அதன்படி, அனைத்து ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்த ஒரு வளாகத்திலும் நடத்த கூடாது .  கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்திற்கான செலவின வரம்பு ரூ 5,000க்கு மிகாமல் இருக்க வேண்டும் என உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.  

கிராம சபை கூட்டம்


இந்த கூட்டத்தில் அந்தந்த கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது  வடகிழக்கு பருவமழை தொடங்கியிருப்பதால் அதற்கான ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுத்துரைக்க வேண்டும். மேலும், இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்து செலுத்துதல்  உட்பட பல தலைப்புகளில் விவாதம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web