இன்று மாலை ஏழை ஜோடிகளுக்கு பிரம்மாண்ட திருமணம்... அம்பானி குடும்பத்தினர் பங்கேற்பு!

 
ஆனந்த் அம்பானி

 ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர்  இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் கூட. இவரது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டிற்கும்  ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமண நிகழ்வு மார்ச் முதலே கொண்டாடப்பட்டு வருகிறது.  ஆனந்த் அம்பானியின் முதல் ப்ரீ வெட்டிங் நிகழ்வு குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு மற்றும்  சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து  ஜூன் மாதம் அனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட்டின்  2வது ப்ரீ வெட்டிங் கொண்டாட்டம் இத்தாலியில் ஒரு சொகுசு கப்பலில் நடந்தது. 3 நாட்கள் நடந்த இந்த கொண்டாட்டத்திலும் திரை பிரபலங்கள் உட்பட பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.   இவர்களது  திருமணம் ஜூலை 12 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட நிகழ்வுக்கு முன்னதாக  ஏழை எளிய ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரம்மாண்ட விழாவை நடத்தவும்  முகேஷ் அம்பானி குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.  இந்த  திருமணம், ஜூலை 2ம் தேதி மாலை 4:30 மணிக்கு பால்கரில் உள்ள சுவாமி விவேகானந்த் வித்யாமந்திரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்வு தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஏழை எளிய ஜோடிகளின் திருமணம் தானேயில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனந்த் அம்பானி


முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதி ஏற்பாடு செய்துள்ள இந்த   திருமண விழாவிற்கான நிதியுதவி முழுக்க முழுக்க அம்பானி குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகேஷ் நீதா தம்பதி இந்நிகழ்வில் கலந்து கொண்டு  மணமக்களை வாழ்த்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.ஜூன் 29 ம் தேதி அம்பானிகளின் இல்லமான ஆண்டிலியாவில் அனந்த் - ராதிகாவின் திருமணத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்துள்ளது. இதன் மூலம் அனந்த் - ராதிகாவின் திருமண கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.  கடந்த சில நாட்களாக முகேஷ் - நீதா தம்பதி பல்வேறு பிரபலங்களை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வருகின்றனர்.

முகேஷ் அம்பானி

அத்துடன் ஆனந்த் - ராதிகாவின் திருமண அழைப்பிதழ் குறித்த புகைப்படங்கள்,  வீடியோக்கள் ஏற்கனவே வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில், ஜூலை 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் ஜூலை 13 ம் தேதி சுப் ஆஷிர்வாத் அல்லது தெய்வீக ஆசீர்வாத விழாவும், ஜூலை 14 ம் தேதி மங்கள் உத்சவ் அல்லது திருமண வரவேற்பு நிகழ்ச்சியுடன் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web