பெரும் கொடூரம்.. அக்காவுக்கு பாலியல் தொல்லை.. தம்பி உயிருடன் எரித்துக் கொலை!

 
அமர்நாத்

ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தை மறைவிற்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா, பாட்டி வீட்டில் வசித்து வந்தான். 

மூன்று நாட்களுக்கு முன்பு சிறுவன் அமர்நாத், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளிக்கு காலை 5 மணிக்கு டியூஷன் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பினான். அதன்பிறகு அவன் வீடு திரும்பவேயில்லை. அன்று வீட்டிலிருந்து கிளம்பிய அரை மணிநேரத்திற்குள், குடும்பத்தினரை தொலைப்பேசியில் அழைத்த சிறுவன் அமர்நாத், யாரோ சிலர் தன்னைத் தாக்குவதாகக் கூறியுள்ளான்.

இதனால் குடும்பத்தினர் பதறிபோய் அங்கு ஓடினர். அங்கு தீயில் எரிந்த நிலையில் கிடந்த சிறுவன் அமர்நாத்தை அவர்கள் மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

அமர்நாத்

அப்போது பேசிய சிறுவன் அமர்நாத், சைக்கிளில் செல்லும்போது என்னை நிறுத்தி வாயில் துணிகளை வைத்து அடைத்தனர். என் கைகளைப் பின்னால் வைத்து, உடலை தார்பாய் வைத்து சுற்றியதுடன், உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். என்னைத் தாக்கியது வெங்கடேஸ்வன். அவருடன் உள்ள மற்ற மூவர் யார் என்று தெரியவில்லை, என்னை கொள்ளப்போகீறார்கள், எனக்கு இப்போது நடந்திருப்பது அவர்களுக்கும் நடக்கவேண்டும். அவர்களை விட்டுவிடாதீர்கள், என்றும் கூறியுள்ளான்.

பின்னர் சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அமர்நாத்தின் உயிர் பிரிந்திருக்கிறது. பின்னர் சிறுவன் கொலை தொடர்பாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. 

அமர்நாத்

அதாவது, சிறுவன் அமர்நாத்தின் சகோதரி 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் (23)  என்பவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுவனின் சகோதரி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் இந்த தகவல் சிறுவன் அமர்நாத்துக்கு தெரியவந்ததால் அவன், வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். இதனால் அவர்கள் வெங்கடேஸ்வராவை பிடித்து எச்சரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்து சிறுவனை கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தச் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் வெங்கடேஸ்வர் உயர் சாதியைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. அதேபோல் உயிரிழந்த அமர்நாத் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுவதால், இந்த வழக்கு அரசியல்ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி வெங்கடேஸ்வரா தலைமறைவான நிலையில், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web