பெரும் பரபரப்பு.. பிரபல ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

 
ரவுடி துரை

திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ரவுடி துரை. இவர் புதுக்கோட்டை வம்பன் வனப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் வனப்பகுதிக்கு சென்றனர். ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாருக்கும், ரவுடி துரைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் மீது ரவுடி துரை தாக்குதல் நடத்தியதாகவும், பாதுகாப்புக்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் ரவுடி துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி

ரவுடி துரை (துரைசாமி) மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.   சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது 4 கொலை வழக்கு , கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு என  உள்பட 70 வழக்குகள் உள்ளன. 2023-ம் ஆண்டு திருச்சியில் ஒரு திருட்டு வழக்கு விசாரணைக்கு வந்தபோது ரவுடி துரை தப்பி ஓடிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web