பெரும் சோகம்... இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்... விவசாயிகள் கண்ணீர்!

 
மழை நீர் வெள்ளம் பயிர் சேதம் நெல் நெற்கதிர்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் விவசாயிகள் கனமழையினால் பெரும் அழிவை சந்தித்து, கதறுகின்றனர். கடந்த சில நாட்களாகவே நாகை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்ய்து வரும் கனமழையால், நெற்பயிர்கள் முழுவதுமாக இடுப்பளவு தண்ணீரில் முழ்கியதால் விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

நாகை மாவட்டத்தில் மட்டுமே சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரில் நேரடி மற்றும் நடவு முறையில் சாகுபடி நடைபெற்றுள்ளது. இந்நிலையில், பயிர்கள் 20 முதல் 35 நாட்கள் இளம் பயிராக உள்ள நிலையில், நாகை மாவட்டம் முழுதும் கடந்த ஒரு வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்ததால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்க துவங்கியது. இந்நிலையில், தொடர் மழை காரணமாக மாவட்டம் முழுவதும் விடாமல் பெய்து வரும் கனமழையால் சாகுபடி செய்துள்ள வயல்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

வயல்வெளிகளில் இடுப்பளவு நீர் தேங்கியுள்ளது

மேலும் வாய்க்கால்களில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் வயலில் இருந்த தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை இன்னும் தொடரும் என கூறப்படும் நிலையில், இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி அழுகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. வயல்கள் எல்லாம் குளம் போல் மாறி பயிர்கள் நீரில் மூழ்கி வெளியே தெரியாத அளவிற்கு உள்ளதால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web