பெரும் சோகம்... பாம்பை பிடிக்க சென்ற இளைஞர் பாம்பு கடித்து பலி!
கேரளா மாநிலம் கொல்லத்தில் வசித்து வருபவர் சஜு ராஜ். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப் பிடித்து பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவதை பணியாக செய்து வருகிறார். அந்த வகையில் டிசம்பர் 29ம் தேதி ஏரூர் தேகேவயல் காலணி அருகே ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இந்த பாம்பு அந்த வீட்டில் இருந்த ஒருவரை கடித்துள்ளது. இதனால் பயந்து போன வீட்டின் உரிமையாளர் உடனடியாக சஜூவை தொடர்பு கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சஜு வீட்டிற்குள் நுழைந்து பாம்பை தேடினார். ஆனால் அவருக்கு பாம்பு கிடைக்கவில்லை. உடனே அருகில் இருந்த புதரில் இருக்குமோ என்ற எண்ணத்தில் அதனை சுத்தம் செய்யத் தொடங்கினார். அதில் நாகப்பாம்பு ஒளிந்து இருந்ததை கண்டுபிடித்து உரிமையாளரிடம் காட்டினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை பாம்பு கடித்து விட்டது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இருந்தாலும் அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகவே இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 31ம் தேதி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!