பெரும் பதற்றம்... அதிமுக பிரமுகர் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை!

 
பஞ்சநாதன்

சென்னையின் புறநகர் பகுதியான மீஞ்சூரை அடுத்த வல்லூரைச் சேர்ந்தவர் பஞ்சநாதன் (57). அதிமுகவில் 3ஆவது வார்டு கிளை செயலாளராக இருந்த பஞ்சநாதன், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். மேலும் இவர் தனது வீட்டின்முன்பு புதிதாக 2 கடைகள் கட்டி உள்ளார். 

பஞ்சநாதன்

இந்நிலையில் நேற்றிரவு பஞ்சநாதன் தனது கடை முன்பு உறங்கினார். இதனை நோட்டமிட்டு ஒரு கும்பல் அவரை இரவில் வெட்டி சாய்த்து அதே இடத்தில் கொடூரமாக கொலை செய்தது. எனினும் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு எதுவும் தெரியவில்லை. அதிகாலையில் அப்பகுதி மக்கள் பார்த்தபோது, கடையின் அருகில் ரத்த வெள்ளத்தில் பஞ்சநாதன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மீஞ்சூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த போலீசார் பஞ்சநாதனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பஞ்சநாதனை மர்ம கும்பல் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது தெரியவந்தது. எனினும் கொலைக்கான காரணம் என்ன?, கொலையாளிகள் யார்? என்று தெரியவில்லை. 

பஞ்சநாதன்

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில் போட்டியா? குடும்ப பிரச்சினையில் யாரும் கொலை செய்தார்களா? எனவும் விசாரணை நடத்துகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

 

From around the web