பெரும் சோகம்.. கோர விபத்து.. 3 மாத குழந்தை, தாய் உட்பட 3 பேர் பலி!

 
ஹயாத் பாத்திமா

கர்நாடக மாநிலம்பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே - அவுட்டைச் சேர்ந்தவர் ஜாகிர் அகமது (60). இவர் உறவினர்களான இம்ரான் கான் (32), தபசூம் (28), தப்ரீஸ் அகமது (27), சபா (27), நயாஸ் (22) மற்றும மூன்று மாத பெண் குழந்தை ஹயாத் பாத்திமா ஆகியோர் காரில் கோவா சுற்றுலா சென்றிருந்தனர்.

அங்கு சுற்றுலாவை கொண்டாடிவிட்டு கோவாவில் இருந்து பெங்களூரு நோக்கி காரில் பயணப்பட்டனர். இந்த கார், கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டம் விஜயாப்புரா அருகே கொல்லரஹட்டி பகுதியில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது தூரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதிய கார் பல்டி அடித்து தலைக்குப்புற கவிழ்ந்து சாலையில். இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

ஹயாத் பாத்திமா

இந்த விபத்தை பார்த்த வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே, இந்த கோர விபத்தில் காரின் இடிபாடுகளில் சிக்கி அதில் பயணம் செய்த ஒரு பெண், ஒரு ஆண் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 3 மாத குழந்தை உள்பட 5 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர்.

ஹயாத் பாத்திமா

போலீசார், அப்பகுதியினர் சேர்ந்து காரில் சிக்கி உயிருக்கு போராடிய 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 மாத குழந்தை உயிரிழந்தது. மற்ற 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பரமசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web