டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.77 லட்சம் கோடி... நிதி அமைச்சகம் தகவல்!
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில், “டிசம்பர் மாதம் ஈட்டப்பட்டுள்ள 1,77 லட்சம் கோடி ரூபாயில் மத்திய ஜிஎஸ்டிரூ.32,836 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.40,499 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.47,783 கோடி, செஸ் வரி ரூ.11,471 கோடியாகும்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 7.3 சதவீதம் அதிகமாகும். இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் ரூ.1.65 லட்சம் கோடியாக இருந்தது.உள்நாட்டு பரிவர்த்தனைகளின் ஜிஎஸ்டி 8.4 சதவீதம் அதிகரித்து ரூ.1.32 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மீதான வரி வருவாய் சுமார் 4 சதவீதம் அதிகரித்து ரூ.44,268 கோடியாகவும் உள்ளது. டிசம்பர் மாதத்தில், ரூ.22,490 கோடி மதிப்பிலான ரீபண்டுகள் வழங்கப்பட்டன.
இது முந்தைய ஆண்டை காட்டிலும் 31 சதவீதம் அதிகரித்துள்ளது. ரீபண்ட்களை சரிசெய்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வசூல் 3.3 சதவீதம் அதிகரித்து ரூ.1.54 லட்சம் கோடியாக இருந்தது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!