வெள்ளை மாளிகையில் வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து!
மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்-காசா போர் காரணமாக அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. இந்த போரை நிறுத்துவது குறித்து அந்த நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். எனினும் போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில் வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து விருந்து அளித்துள்ளார். அதன்படி பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர் சல்மான் பின் ஹமாத் அல் கலீபா மற்றும் கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆகியோரை தனித்தனியாக டிரம்ப் சந்தித்து விருந்து அளித்தார்.

ஏற்கனவே முந்தைய பதவிக்காலத்தில் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் சென்றிருந்தார். இதன்மூலம் காசா போரில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்தது. தற்போதைய இந்த சந்திப்பில் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் அமைதியை நிலைநாட்டுவது, அமெரிக்க ஜெட் விமானங்கள், கணினி சேவையகங்கள், அலுமினிய உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
