சூப்பர்... கை கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி மாணவன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 420!

இன்று தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருநெல்வேலி மாவட்டம், மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவைச் சேர்ந்த சசிகுமார் - பாப்பம்மாள் தம்பதியின் மகன் தமிழ்செல்வம். தந்தை சசிகுமார் தனியார் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் மாணவர் தமிழ்செல்வம் பிறவி முதலே கை, கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத மாற்றுதிறனாளி .
இவரது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் காரணமாக மனம் தளராது படித்தார். பெற்றோரின் உதவியுடன் பள்ளி சென்று வரும் நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை உதவியாளர் வைத்து எழுதியிருந்தார். இதில் தமிழ்செல்வம் தனது கடின முயற்சியால் 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
மதிப்பெண் பட்டியல்
தமிழ்-88
ஆங்கிலம்-76
கணிதம்-88
அறிவியல் - 83
சமூக அறிவியல்- 85 மதிப்பெண்களும் எடுத்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் எனது , கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். தேர்வில் 420 மதிப்பெண்கள் கிடைக்க காரணமாக இருந்த எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது எதிர்கால லட்சியம் சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான் என கூறியுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!