பஸ் படியில் தொங்கிய படியே பயணம்... எட்டி உதைத்ததில் மாணவர் படுகாயம்!

 
பேருந்து

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து பரவத்தூர் வழியாக சோளிங்கருக்கு தினமும் தடம் எண் 45 - டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தில்  சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் சோளிங்கர் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்கின்றனர். பேருந்தில்  சில மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடியே பயணம் செய்தனர். மேலும் சிலர்  ஜன்னலை பிடித்து தொங்கியபடியும் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள்

ஓட்டுனர் நடத்துனர் யார் கூறினாலும் அவர்கள் யாரும்  கண்டுகொள்வதே இல்லை.  வழக்கம்போல் நேற்று அரக்கோணத்தில் இருந்து பரவத்தூர் வழியாக சோளிங்கர் நோக்கி டவுன் பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான மாணவ, மாணவிகள் இருந்தனர்.படிக்கட்டிலும் மாணவர்கள் தொங்கியபடிய ஜன்னலில் தொங்கியபடியே பயணம் செய்தனர்.  

சுமார் 8.40 மணிக்கு சோளிங்கர் அடுத்த அய்யனேரி பகுதியில் வந்தபோது, சாலையோரம் நடந்துசென்ற முதியவரை படிகளில் தொங்கியபடியே  சென்ற ஒரு மாணவன் எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி முதியவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு  முதியவரை மீட்டு ஆறுதல் கூறினர்.

அரசு பேருந்து

அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர்.  இச்சம்பவம் குறித்து  காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் பேருந்து  அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்தில்  வந்தவர்கள் அங்கிருந்து 3 கி.மீ. தூரம் உள்ள சோளிங்கருக்கு நடந்தே வந்தனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?