மகிழ்ச்சி!! கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்தது!! WHO அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
2019 இறுதியில் சீனாவின் வூகாண் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியது. இதனால் உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அறிவித்தன. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகும் உயிரிழப்புக்களையும், கொரோனா பரவலையும் 2 ஆண்டுகளாக கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
2020 ஜனவரி 30ம் தேதி முதல் உலக அளவில் சுகாதார அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. அதன்பின் தடுப்பு மருந்தால் கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வரப்பட்டதன் பிறகு அந்தந்த நாடுகள் ஊரடங்கை திரும்ப பெற்றன
இந்நிலையில் 3 ஆண்டுகள் கழித்து கொரோனா அவசர நிலை முடிவுக்கு வந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 2021ல் வாரத்திற்கு 100,000க்கும் அதிகம் என்ற அளவில் உச்சத்தில் இருந்தது. தொடர் தடுப்பு ஊசிகள், ஊரடங்குகள், கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக ஏப்ரல் 24 அன்று 3,500 க்கும் கீழ் குறைந்தது. உலகளவில் 765 மில்லியனுக்கும் அதிகமாக கோவிட் தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!