31 வயசு தான்... காணாமல் போன மாடல் அழகி சடலமாக மீட்பு... போலீசார் விசாரணை!

 
கைகன் கென்னகம்.

31 வயசெல்லாம் சாகிற வயசா என்று மாடல் உலகம் கைகன் கென்னகம்மின் மரணம் குறித்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி கைகன் கென்னகம் காணாமல் போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளது மாடல் உலகத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கைகன் கென்னகம், தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலை தேடி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பஹ்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு உணவகம் ஒன்றில் அவருக்கு வேலை கிடைத்தது. பஹ்ரைனில் உள்ள ஒருவரை காதலிப்பதாகவும் கைகன் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அவர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவில்லை என்று தெரிகிறது. இதனால் கவலையடைந்த அவரது குடும்பத்தினர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்து தூதரகத்தின் உதவியை நாடினர். ஆனால் அவர்களால் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் ஏப்ரல் 18ஆம் தேதி தாய்லாந்து தூதரகம் கைகன் குடும்பத்தினரை அழைத்து சல்மானியா மருத்துவ வளாகத்தில் உள்ள பிணவறையில் சடலத்தை கண்டெடுத்து இதில், 'உங்கள் மகள் யார் என அடையாளம் காட்ட முடியுமா?' கேட்டுள்ளனர். அதன்படி, கைகன் கென்னகத்தின் காலில் பச்சை குத்திய அடையாளத்தையும் உறுதி செய்தனர்.

அதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கைகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். விசாரணையில் அவர் விஷம் கலந்த மது அருந்தி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கைகனின் மரணத்தில் அவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web