27 வயசு தான்... இளம்பெண்ணை ஆணாக மாற்றுவதாக கொலைச் செய்த மந்திரவாதி!

 
பூனம்

எத்தனை சதுரங்க வேட்டைப் படங்கள் வெளியானாலும், ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை இந்த உலகில் ஏமாற்றி பிழைப்பவர்களும் இருப்பார்கள் என்பது நியதி போல. இருபத்தேழு வயசு தான் ஆச்சு. எத்தனையோ கனவுகள்.. எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகள் என அத்தனையும் உயிரையும் இழக்கும் வரை கொண்டு சென்றுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த இளம்பெண் பூனம் குமாரி (27). பூனம் குமாரி, கல்லூரியில் படிக்கும் போது, இவர் வசித்து வந்த பகுதியில் பிரீத்தி (25) எனும் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் தன்பாலின ஈர்பாலர்கள் என தெரிந்து உறவில் இருந்துள்ளனர்.

எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த நிலையில், இவர்களது தன்பாலின ஈர்ப்பு விவகாரம் ஊர்மக்கள் மத்தியிலும் தெரிய துவங்கியது. இரு வீட்டினரையும் ஊர் மக்கள் இவர்களது உறவு குறித்து கேலி பேசி வந்தனர். ஊர்மக்களின் ஏளன பேச்சுக்கு பயந்து இருவரின் குடும்பமும் தவித்து வந்த நிலையில், தான் ஆணாக மாறி பீரித்தியை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்கிற விபரீத யோசனை பூனம் குமாரிக்கு வந்துள்ளது.  தனது மகள் பிடிவாதமாக இப்படியொரு ஆசையை கொண்டிருப்பதைக் கூறியதும் குடும்பத்தினர் அதிர்ந்தனர். இதைப் பயன்படுத்தி பூனம் குமாரியைக் கொலைச் செய்ய பிரீத்தியின் தாயார் திட்டமிட்டுள்ளார்.  

same sex

அதன் பின்னர், பூனம் குமாரியின் தாயார் ஊர்மிளா, ராம் நிவாஸ் எனும் மந்திரவாதியைப் பார்த்து இந்த கொலைச் செய்யும் சதித்திட்டத்தை அரங்கேற்றி உள்ளார். பூனமை கொலை செய்தால் ரூ.1.5 லட்சம் தருகிறேன் என மந்திரவாதியிடம் கூறிய பிரீத்தியின் தாயார் ஊர்மிளா, முன்பணமாக சில தொகையை கொடுத்துள்ளார். மந்திரவாதியான ராம் நிவாஸை பூனமிடம் அறிமுகம் செய்து இவர் உன்னை ஆணாக மாற்றி விடுவார் என்று கூறியுள்ளனர்.

அதன் பேரில் இந்த சடங்கிற்காக பூனம் குமாரி வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் ஒரு வார காலமாகியும் பூனம் குமாரி திரும்பாததால், குடும்பத்தினர் பூனம் குறித்து சந்தேகமடைந்தனர். தனது தங்கை பூனம் குமாரி காணவில்லை என்று அவரது அண்ணன் இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பூனம் குமாரியின் செல்போன் அழைப்பு விவரங்களை சோதனை செய்து பார்த்தனர்.

sacrifice

அப்போது தான் மந்திரவாதி ராம் நிவாஸ் உடன் அவர்கள் நீண்ட நேரம் பேசியது தெரிய வந்தது. தொடர்ந்து ராம் நிவாஸை கைது செய்து போலீசார் நடத்திய விசாரித்தனர். அதில், தான் பூனமை ஆணாக மாற்றுவதாகக் கூறி அழைத்து சென்று கொலைச் செய்து விட்டதாகவும், கோமதி நதிக்கரையில் உள்ள காட்டுப் பகுதியில் உடலை போட்டு விட்டு சென்று விட்டதாகவும் கொலை குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்தார். இந்த கொலையில் பிரீத்திக்கும் தொடர்புண்டு என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது மேலும் அதிர்ச்சியடைய செய்தது. 

இதைத் தொடர்ந்து ராம் நிவாஸ்சுடன், இளம் பெண் பிரீத்தி, தாயார் ஊர்மிளா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது இபிகோ 302, 120 பி, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!

From around the web