மேக்கப் அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தினார்... பிரபல நடிகை தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்!
பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து முண்ணனியில் இருந்து வரும் நடிகை கிருஷ்ண முகர்ஜி.இவர் தயாரிப்பாளர் தன்னை அறைக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் குறித்து சமூக வலைதளங்களில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "எனது மனதில் இருக்கும் விஷயங்களை சொல்ல இத்தனை நாட்கள் தைரியம் வரவில்லை.
ஆனால் இப்போது வெளியே சொல்ல முடிவு செய்து விட்டேன். கடந்த ஒன்றரை வருடங்களாக அடுத்தடுத்து சிரமங்களை சந்தித்தேன். தனிமையில் இருக்கும்போது வாய்விட்டு அழுதேன். 'சுப் ஷகுன்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள தொடங்கிய போதே எனக்கான துன்புறுத்தல் தொடங்கியது. அந்த நிகழ்ச்சி முதலே எனக்கு மோசமான அனுபவம்.
படப்பிடிப்பின் போதும் தயாரிப்பாளர் குந்தன் சிங் எனக்கு பல தடவை தொல்லை கொடுத்து வந்தார். என்னை மேக்கப் அறையில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தினார். நிகழ்ச்சி ஒளிபரப்பாகி 5 மாதங்களாகியும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து பலரிடம் உதவி கேட்டும் பலன் இல்லை. இதனால் பாதுகாப்பு இல்லாத நிலையில் நொறுங்கி போயுள்ளேன். எனக்கு நீதி வேண்டும்'' என கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
