இன்று 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இன்று அடுத்த 3 மணி நேரத்தில், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதே நேரத்தில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி இருப்பதால் இன்றும் நாளையும் மழை வெளுத்து வாங்கப்போகிறது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கலாம். மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் சென்னை, திருவள்ளூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ,ஈரோடு ,சேலம், நாமக்கல், தென்காசி ,சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!