2 நாட்களுக்கு வெளுத்து வாங்கப் போகும் கனமழை!
![மழை](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/91ccc763043b9d94461e4af647ee2c75.png)
தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி நீலகிரி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!