போஸ்னியாவில் கனமழை.. திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதைந்த வீடுகள்.. 16பேர் பலி!

 
போஸ்னியா நிலச்சரிவு

போஸ்னியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஜப்லானியா, கொன்ஜிக் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த கிராமங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிட்டனர்.

மீட்புப் படையினர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ஜப்லானியாவில் உள்ள கல்குவாரியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் பல  வீடுகள் மண்ணில் புதைந்தன. அப்போது நள்ளிரவு ஆகிவிட்டதால் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் இந்த இடிபாடுகளில் சிக்கினர். இது குறித்து பேரிடர் மீட்பு குழுவினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்த நடுப்படையினர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும், இந்த நிலச்சரிவில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலச்சரிவில் மேலும் பலர் புதையுண்டதாக கூறப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!