இன்று தஞ்சை, தென்காசி உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் பரவலாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று ஆகஸ்ட் 3ம் தேதி தமிழகத்தில் தென்காசி, தேனி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
