கனமழை… சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் விடுமுறை கிடையாது... பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்!

 
விடுமுறை

சென்னை மாவட்ட மாணவர்கள், தங்களது மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா என்கிற குழப்பத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தஞ்சை, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும், காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

கனமழை காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். அதே போன்று, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார். 

இன்று மழை மேலும் நீடிக்கும் என்பதாலும், வெள்ளநீர் முழுவதுமாக வடியாததாலும், பல இடங்களில் பள்ளி கட்டிடங்களுக்குள்ளும், அருகாமையிலும் மழை நீர் புகுந்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர், திருவள்ளூர், திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கனமழை காரணமாக இன்று கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் விழுப்புரம் என 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புதுச்சேரியிலும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதன் காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் நவம்பர் 16ம் தேதி மாறக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல்  கனமழை பெய்து வருகிறது. அதே போல் விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. எனவே, இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனமழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று கடலூர் மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web