ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளம்... பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு!
![காபுல்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/24671103d14f2e44c223d779c9aa2fd5.webp)
ஆப்கானிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தலைநகர் காபுல், பஹ்லன் மாகாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
The situation of the people in Baghlan is extremely urgent. The flood has destroyed people's lives. pic.twitter.com/6AGgUs2O03
— Homeira Qaderi (@QaderiHomeira) May 10, 2024
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல நகரங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், மீட்பு நடவடிக்கையி தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!