இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை; வானிலை மையம் அறிவிப்பு!

 
இடி மின்னல் மழை
 

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

மழை


தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து  மே 16 ம் தேதி (வியாழக்கிழமை) தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வெயில் , மழை
இன்று முதல் வருகிற 16ம் தேதி வரை 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்பதால், கோடை வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்படும் என்று வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உள்மாவட்டங்களில் அனேக இடங்களில் இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் மட்டும் 5 டிகிரி பாரன்ஹீட் இயல்பைவிட அதிகரித்தும் வெப்பம் பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web