பாகிஸ்தானில் கனமழை... நிலச்சரிவில் சிக்கி 300க்கும் மேற்பட்டோர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!

 
பாகிஸ்தான் நிலச்சரிவு கனமழை

பாகிஸ்தானில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள லோயர் டிர், பஜவுர், அபோட்டாபாத் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இந்த வெள்ளப்பெருக்கில் ஏராளமான வீடுகள் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் இடையே உள்ள காரகோரம், பால்டிஸ்தான் நெடுஞ்சாலைகள் போன்றவை அடித்துச் செல்லப்பட்டன. 

பாகிஸ்தான் கனமழை

இதனால் அந்த நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் அவதியடைந்தனர். எனவே அவர்கள் அனைவரும் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல் பஞ்ச்கோரா, சுத்னோதி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான்

இதனை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால் மைதான் சோரி பாவ் நகரில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலச்சரிவு மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் மேலும் பலர் அடித்துச் செல்லப்பட்டு உள்ளனர். எனவே அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?