ஜூலை 20 வரை இந்த மாவட்டங்களில் கனமழை... ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!
கேரளாவில் ஜூலை 17, 19 மற்றும் 20 தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, மலப்புரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்குள் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கோரப்புழா (கொல்லிக்கல் நிலையம்) மற்றும் குட்டியாடி (குட்டியாடி நிலையம்) ஆகிய ஆறுகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், எந்தவொரு சூழ்நிலையிலும் மக்கள் ஆறுகளுக்குள் நுழையவோ அல்லது கடக்கவோ கூடாது என்றும், ஆற்றங்கரைகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி நீர்வளத்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
