பகீர் வீடியோ... ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்... காட்டுத்தீயை அணைக்க சென்ற போது திடீர் விபத்து!

 
ஹெலிகாப்டர்
 

பிரான்சின் பிரிட்டனி மாகாணம் ரோஸ்பெர்டன் நகரில்  வனப்பகுதியில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்பு பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. 

இந்நிலையில், ரோஸ்பெர்டன் நகரில் உள்ள ஏரியில் இருந்து  மொரனி 29 ரக ஹெலிகாப்டர் தண்ணீரை சேகரித்தது.  அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் சிறிதுநேரம் வட்டமடித்தது. இதனையடுத்து ஹெலிகாப்டர் ஏரிக்குள் விழுந்துவிட்டது.


இந்த திடீர் விபத்தில் விமானி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.  தண்ணீரை சேகரிக்க முயன்றபோது ஹெலிகாப்டரின் அடிப்பகுதி ஏரியில் உள்ள தண்ணீர் மீது உரசியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்த  வீடியோ தற்போது சமூகவலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?