நடிகை கரீனா கபூருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
கரீனா கபூர்

பிரபல இந்தி திரைப்பட நடிகை கரீனா கபூருக்கு, மத்திய பிரதேச மாநிலத்தின் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நடிகை கரீனா கபூர் எழுதியிருக்கும் புத்தகத்தின் தலைப்பில் 'பைபிள்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக உயர்நீதிமன்றம் கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 2021ல் நடிகை கரீனா கபூர், 'கரீனா கபூர் கானின் கர்ப்ப பைபிள்: தாய்மார்களுக்கான உயரிய கையேடு' என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டிருந்தார்.

கரீனா கபூர்

இந்நிலையில் புத்தகத்தின் தலைப்பு கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி வழக்கறிஞர் கிறிஸ்டோபர் ஆண்டனி என்பவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கறிஞர் கிறிஸ்டோபர் தனது மனுவில், 'பைபிள்' என்ற வார்த்தை மலிவாக பிரபலம் அடையும் நோக்கத்தில் தலைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இது ஆட்சேபனைக்குரியது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இதற்காக நடிகை கரீனா கபூர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.


ஜபல்பூரை சேர்ந்த இவர் இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் இவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்ட நிலையில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், அதனைத் தொடர்ந்து கூடுதல் அமர்வு நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்தார். இந்த இரு நீதிமன்றங்களும் கிறிஸ்டோபர் ஆண்டனியின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டன. 
இந்நிலையில், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றம் இந்த வழக்குத் தொடர்பாக நடிகை கரீனா கபூருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web