குழந்தைக்கு தடுப்பூசி போட்ட இடத்தில் ஓட்டை.. சென்னையில் பரபரப்பு!

 
குழந்தை தடுப்பூசி

மருத்துவர்களை தெய்வமாகவே கருதி வரும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். விரல் நுனியில் விஞ்ஞானம் அமர்ந்து கொண்டு நம்மை வரவேற்றாலும், நாற்பது வயசாச்சு... இன்னும் டாக்டர்கிட்டே போனதில்லை என்று பெருமை பேசும் கிராமத்து வெள்ளந்திகளும் இருக்கிறார்கள். நோய் நாடி நோய் முதல் நாடி.. என்பதெல்லாம் வழக்கொழிந்து போய் விட்டது. வயிற்று வலி என மருத்துவமனைக்கு சென்றால், வயிற்றைக் கிழித்து கத்திரிக்கோலையோ, கத்தியையோ வைத்து தைத்து விடுவதும், மருத்துவமனையில் வாங்கிப் போட்டிருக்கும் எல்லா மெஷின்களையும் ஒரு முறை பயன்படுத்தி விட்டு லட்சங்களை வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு பயந்து அரசு மருத்துவமனைக்கு படையெடுக்கிறார்கள் சாமானிய மக்கள்.ஆனால், அரசு மருத்துவமனைகளில் பெரும்பாலான இடங்களில் அலட்சியமே அவலமாக இருக்கிறது. மருத்துவர்கள்  மட்டுமல்லாமல் கேட் காவலாளி, செவிலியர் என பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் ஏழை மக்களிடம் அலட்சியமாக நடந்து கொள்ளும் போக்கு பல காலங்களாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், பிறந்து 100 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்திய இடத்தில் ஓட்டை விழுந்த சம்பவம் சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சித்தாலப்பாக்கத்தில் வசிப்பவர் முருகன். இவரது மனைவி பிரியா. இவர்களுடைய ஆண் குழந்தைக்கு பிறந்து 100 நாட்களே ஆன நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். 

குழந்தை உயிரிழப்பு

குழந்தைக்கு மருத்துவமனையில் செவிலியர் தடுப்பூசி போட்ட நிலையில், சிறிது நேரத்திலேயே ஊசி போட்ட இடத்தில் சிவப்பு நிறத்தில் தடிப்பு ஏற்பட்டு காயம் உருவாகியிருக்கிறது. அதன் பின்னர், ஊசி போட்ட இடத்தில்ஓட்டை விழுந்ததைப் போன்று பெரிய காயம் ஏற்பட்டுள்ளது. குழந்தையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தைக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது.

உடனடியாக பதற்றமடைந்த பெற்றோர் குழந்தையை  அழைத்துக் கொண்டு வீட்டின் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் எலும்பு பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். 

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

அதன் பின்னர், பெற்றோரிடம் சம்மதித்ததாக கையெழுத்து வாங்கிக் கொண்டு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அரசு மருத்துவமனையில் செவிலியரின் அலட்சியப் போக்கினால், குழந்தைக்கு இந்த நிலை ஏற்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web