விடுமுறை கொண்டாட்டம்... மீன் பிடிக்க சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி பலியான சோகம்!

 
சுரேஷ்

தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்து, நேற்று 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளின் வெளியாகி உள்ளது. பிற வகுப்பு மாணவர்களுக்கு த் முழு ஆண்டு தேர்வு முடிந்து கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறையில் மீன் பிடிப்பதற்காக ஏரிக்குச் சென்ற மாணவன், ஏரியில் முழ்கி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் உள்ள இருளர் காலனியில் வசித்து வருபவர் அர்ஜூனன். அந்த பகுதியில் கூலி தொழில் செய்து வரும் அர்ஜூனனுக்கு சுரேஷ் (14) என்ற மகனும், காமாட்சி (12) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், சுரேஷ், கனகம்மாசத்திரம் அருகே உள்ள ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ள நிலையில், ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

water

நேற்று முன்தினம் சுரேஷூம், அவனது நண்பர்கள் இருவரும் சேர்ந்து மூவருமாக ஏரியில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நண்பர்களுடன் சுரேஷ் ஏரியில் குதித்து விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக சுரேஷ் தண்ணீரில் மூழ்கி சேற்றில் சிக்கியுள்ளான். நீண்ட நேரமாகியும் சுரேஷ் வெளியே வராததால் அதிர்ச்சியடைந்த அவனது நண்பர்கள் அருகில் இருந்தவர்களிடம் தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து சென்ற அப்பகுதி மக்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன் சுரேஷ் உடலை வெளியே எடுத்து வந்தனர். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கனகம்மாசத்திரம் போலீசார் பலியான சுரேஷின் உடலை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்கச் சென்ற சிறுவன் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web