நெகிழ்ச்சி... மனைவி இறந்த துக்கம் தாளாமல் கணவரும் உயிரிழப்பு... சாவிலும் இணைபிரியா தம்பதி....!!

 
ஆரோக்கியத்தம்மாள்

திண்டுக்கல் மாவட்டத்தில்  பஞ்சம்பட்டி  பெரியார் நகரில் வசித்து வருபவர்   சூசை சுந்தரம் . இவருக்கு வயது 90. இவரது மனைவி 86 வயது ஆரோக்கியம்மாள்.  இவர்களுக்கு 3 மகன்கள், 4 மகள்கள்  . அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். 2 வது மகள் டேவிஸ் மேரி மட்டும் தனது குடும்பத்துடன் பஞ்சம்பட்டியிலேயே தங்கி தனது வயதான பொற்றோர் சூசை சுந்தரத்தையும் ஆரோக்கியம்மாளையும் கவனித்து வந்தார்.

கல்லறை திருநாள்

சூசை சுந்தரம் திண்டுக்கல் தனியார் தோல் ஆலையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.   நேற்று காலை ஆரோக்கியம்மாள்  வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் சூசை சுந்தரம் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார்.   மகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள் உயிரிழந்த ஆரோக்கியம்மாளுக்கு செய்யவேண்டிய இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை   செய்து கொண்டிருந்தனர். மாலை  கல்லறை தோட்டத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்வதற்க்கான ஊர்வலம் தொடங்கும் என உறவினர்கள் அறிவித்தனர். இந்நிலையில் சூசை சுந்தரம் மிகுந்த துக்கத்துடன் மனைவி உடல் வைக்கப்பட்ட இடத்தின் அருகே  மனைவியின் உடலை பார்த்தவாரே அமர்ந்திருந்தார்.

கல்லறை திருநாள்

திடீரென சரிந்து விழுந்து அவரும்  உயிரிழந்தார். இதனை பார்த்த  பிள்ளைகளும், உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர்.  உறவினர்கள் நெகிழ்ச்சியுடன்  இறந்த கணவன், மனைவி இருவருக்கும்  ஒன்றாக இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலம் எடுத்துச் சென்றனர்.  பின்னர்  கல்லறை தோட்டத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர். திருமணம் முதல் பிரியாத   கணவன், மனைவி சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்தது அப்பகுதியில் மிகுந்த  அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web