உயிருக்கு போராடிய கணவன்.. நேரில் பார்க்க ஏங்கிய மனைவிக்கு தீரா சோகம்.. அதிர்ச்சி பின்னணி!

 
நம்பி ராஜேஷ்

கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கரமனா பகுதியை சேர்ந்தவர் நம்பி ராஜேஷ் (வயது 40). இவரது மனைவி அம்ருதா. நம்பி ராஜேஷ், ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட்டில் உள்ள இந்திய பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கேரளாவில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் அம்ருதா. இந்நிலையில், மஸ்கட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ராஜேசுவுக்கு கடந்த 7ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தனது மனைவி அம்ருதா மற்றும் குழந்தைகளை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே ராஜேஷுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கேரளாவில் உள்ள அம்ருதாவுக்கு தகவல் கிடைத்தது. மேலும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை பார்க்க கடந்த 8ம் தேதி கேரளாவில் இருந்து மஸ்கட் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் முன்பதிவு செய்தார். ஆனால் அன்று 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கேரளாவில் இருந்து மஸ்கட் செல்லும் விமானமும் ரத்து செய்யப்பட்டது. இதை அறியாத அம்ருதா, மஸ்கட் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்து, விமான ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

பின்னர், விமான நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டார். இதையடுத்து அம்ருதாவுக்கு கடந்த 9ம் தேதி மஸ்கட் செல்ல ஏர் இந்தியா டிக்கெட் கொடுத்துள்ளது. ஆனால் அன்று விமானப் பணிப்பெண்கள் பணிக்கு வராததால் அம்ருதா தனது கணவரை சந்திப்பதற்காக மஸ்கட் செல்ல திட்டமிட்டிருந்த பயணம் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் பணிக்கு வந்தபோது அம்ருதாவுக்கு மஸ்கட் செல்ல டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அம்ருதாவின் பயணம் ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், மஸ்கட்டில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, அவர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஏர் இந்தியா விமானம்

இவர் தனது மனைவி அம்ருதாவிடம் ஞாயிற்றுக்கிழமை செல்போனில் பேசினார். அப்போது, தனது மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். மனைவியுடன் பேசிவிட்டு தூங்கிய ராஜேஷுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் படுக்கையில் இறந்தார். ராஜேஷ் இறந்தது குறித்து அவரது மனைவி அம்ருதாவுக்கு நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கணவர் இறந்த செய்தி கேட்டு அம்ருதா கதறி அழுதார். நோய்வாய்ப்பட்ட கணவரை ஒருமுறையாவது உயிருடன் பார்க்க வேண்டும் என்பது அம்ருதாவின் ஆசை ஏர் இந்தியா ஊழியர்களின் வேலை விடுப்பு காரணமாக நிறைவேறாதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web