நான் மனிதப்பிறவி அல்ல.. பிரதமர் மோடி சர்ச்சை பேச்சு!

 
மோடி

 இந்தியாவில் மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஒடிஸாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி  தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில்  “சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறினார்.  மோடியின் இந்தக் கருத்து தற்போது ஊடகங்களில் வைரலாகி மாறுபட்ட விமர்சனங்களைத் ஏற்படுத்தியுள்ளது”.

 மேலும் “என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான். ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார். நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது. கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.  ஒடிசாவில் பூரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ராவை ஆதரித்து  மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். இது குறித்து சம்பித் பத்ரா, “பூரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் பக்தர்” என தெரிவித்திருந்தார்.

பிரதமர் மோடி

ஜெகந்நாதரை அவமதிக்கும் விதமாக இந்த கருத்து உள்ளதாக ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட  அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்ட சம்பித், மோடி ஜெகந்நாதரின் பக்தர் எனக் கூறுவதற்கு பதிலாக வாய் தவறி கூறிவிட்டதாக மன்னிப்பு கோரினார். இதற்காக தான் 3 நாள்கள் விரதம் இருக்கப்போவதாகவும் அறிவித்தார். இந்நிலையில்தான், பிரதமர் மோடி, தான் மனிதப் பிறவி அல்ல என குறிப்பிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!