வெறிச்சோடிய மண்டபம்... வீணான உணவு வகைகள்... கதறிய மணமகன்... 1000 பேரை அழைத்தும்... ஒருத்தர் கூட கல்யாணத்துக்கு வரல!

 
சீன கல்யாணம்

ஒருத்தரும் வரலை என்றால், நிஜமாகவே ஒருத்தர் கூட திருமணத்திற்கு வாழ்த்துவதற்காக நேரில் செல்லவில்லை. சுமார் 1000 பேருக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தும் ஒருவர் கூட திருமண நிகழ்வில் கலந்து கொள்ளாததால், திருமணம் நடைப்பெற்ற மைதானமே வெறிச்சோடி போயிருந்தது. ஆயிரம் பேருக்கு சமைத்து வைத்திருந்த உணவு வகைகள் வீணானது. கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் யாருமே தென்படாததால், மணமேடையில் இருந்த கல்யாண மாப்பிள்ளைக்கு பேரதிர்ச்சியுடன் கண்ணீரே வர துவங்கியிருந்தது. 

சீனாவில் உள்ள இளைஞர் ஒருவர் தனது சொந்த கிராமத்தில் இருந்து சில தூரம் தள்ளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் உறுதி செய்யப்படவே தனது திருமணத்தை சொந்த கிராமத்தில் நடத்த திட்டமிட்டு கிராமத்தில் உள்ள 1000 குடும்பங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். திருமணத்தில் 1000 பேருக்கு உணவு, 1000 பேர் உட்கார எதுவாக இருக்கைகள் என பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமண தேதி அன்று விருந்தினர்களை உபசரிக்க காத்திருந்த இவர்களுக்கு எஞ்சியது பேரதிர்ச்சிதான். ஆம் கிராமத்தில் இருந்து ஒருவர் கூட திருமணத்திற்கு வரவில்லை.

 "1000 பேருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு, இருக்கைகள் என அனைத்தும் வீணாகிவிட்டது எனது மகனுக்கும் இது மிக பெரிய அசிங்கமாகிவிட்டது" என மணமகனின் தாயார் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். ஒருவர் கூடவா வரவில்லை என்றால்.. ஆம்... ஒரு நபர் கூட வரவில்லை, வெறிச்சோடி காணப்பட்டது அந்த திருமண நிகழ்வு. அப்படி என்ன காரணமாக இருக்கும்..? திருமணத்திற்கு ஒரு பத்திரிக்கையை கூட மணமகன் வீட்டில் அச்சடிக்கவில்லை.. ஆம், வாய்மொழியில் அழைத்தாலே போதுமானது, அனைவரும் பங்கேற்பார்கள் என்று நினைத்து, திருமணத்திற்கு வந்துவிடுங்கள் என்று வாயால் மட்டுமே அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் கிராமத்தை விட்டு வெளியே இருந்ததால் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் இவர்கள் எந்த ஒரு நிகழ்வுகளிலும் பங்கேற்காமல், கிராமத்தினருடன் பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருந்துள்ளனர். இதுதான் ஒருவர் கூட அந்த திருமணத்தில் பங்கேற்காததற்கு காரணம். இதனால் மொத்த உணவுகளும் வீணானதுதான் மிச்சம். இப்போது புரிந்திருக்கும் மனிதன் ஏன் சமூக விலங்காக இருக்க வேண்டும் என்று.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web