என்னால் தூங்கமுடியவில்லை.. கடைசி ஓவர் குறித்து மனம் திறந்த மோஹித் சர்மா உருக்கம் !!

 
மோஹித் சர்மா

ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை வீசிய மோகித் சர்மா அழைக்கப்பட்டார். முதல் 4 பந்துகளில் 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். 

மோஹித் சர்மா வீசிய கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது.

மோஹித் சர்மா

இதனிடையே கடைசி ஓவரை சிறப்பாக வீசியதாக மோஹித் சர்மாவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், குஜராத் அணியின் தோல்வி குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு மோஹித் சர்மா பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் என் மனம் மிகவும் தெளிவாக இருந்தது. 

வலை பயிற்சியின் போதும், இதற்கு முன்பும் இதுபோன்ற சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டிருக்கிறேன். எனவே நான் அனைத்து பந்துகளையும் யார்க்கர்களாக வீச நினைத்தேன். எனது உள்ளுணர்வின்படியே நான் நடந்தேன்.

கடைசி ஓவரில் நான் மீண்டும் யார்க்கர் வீச முயற்சித்தேன். நான் மிகவும் கவனமாக செயல்பட விரும்பினேன். ஐபிஎல் தொடர் முழுக்க நான் இதைத்தான் செய்தேன். ஆனால் பந்து சென்று விழக் கூடாத இடத்தில் விழுந்தது. என்னால் முடிந்தவரை நான் சிறப்பாகவே செயல்பட்டேன்.

மோஹித் சர்மா

என்னால் அன்றிரவு தூங்க முடியவில்லை. நான் பந்தை இப்படியோ அல்லது அப்படியோ வீசியிருந்தால் என்னவாகியிருக்கும்? போட்டியில் வென்றிருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனினும் இதனை கடந்து போக முயற்சிக்கிறேன், என மோஹித் சர்மா உருக்கமாக பேசினார்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web