40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலை. தமிழ்த்துறை நூலகம்... முதல்வர் ஸ்டாலின் பதிவு!
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் முக்கிய நோக்கமே தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவது தான்.
முதல்வர் ஸ்டாலின் ஜெர்மனியில் தமிழர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். ஜெர்மனியின்கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
— M.K.Stalin (@mkstalin) September 1, 2025
ஐரோப்பாவில் தமிழியல் ஆய்வுகளுக்கான முக்கிய மையமான #Köln தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே 1.25 கோடி ரூபாயை… pic.twitter.com/3OuvGFekyu
தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க ரூ.1.25 கோடியை வழங்கியதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜெர்மன் பேராசிரியர் ஸ்டாலினை தமிழில் வரவேற்றார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40,000 அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலை. தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.
தமிழ்த்துறை மூடப்படுவதைத் தடுக்க, ஆட்சிக்கு வந்ததுமே ரூ.1.25 கோடி வழங்கியது திமுக அரசு. நிதி வீணாகவில்லை என்பதை இங்குள்ள பேராசிரியர்களின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன்.அது வீணாகவில்லை என்பதை இங்குள்ள Dr. Sven Wortmann, Mr. Sharon Nathan, Mrs. Daria Lambrecht ஆகியோரின் தமிழார்வத்தைக் கண்டபோது அறிந்து மகிழ்ந்தேன். சென்னை, மதுரையைத் தொடர்ந்து கோவை, திருச்சியிலும் மாபெரும் நூலகங்களை அனைவருக்குமான அறிவு மையங்களாக அமைத்து வரும் நமது முயற்சிகளுக்கு நல்லூக்கமாக இந்த ‘Cologne Library Visit’ அமைந்தது” என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
