சிறை செல்ல தயங்க மாட்டேன்... திருச்சியில் அமைச்சர் நேரு ஆவேசம்!

 
நேரு

இன்று திருச்சியில் நடைப்பெற்ற கூட்டத்தில், பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ‘நான் சிறை செல்ல தயங்க மாட்டேன்’ என்றார். 

தனது இருப்பை காட்டிக் கொள்ள தான் அண்ணாமலை பேசிவருகிறார். அவருக்கு நாங்கள் பதில் தருவதே இல்லை. அண்ணாமலையை பார்த்தும், அதிமுக வை பார்த்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை. கருணாநிதி திருச்சிக்கு வரும் போதெல்லாம் திருச்சிக்கு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார். அவர் வழியில் தற்போது முதலமைச்சரும் பல திட்டங்களை திருச்சிக்கு தந்து அது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாரதி

அ.தி.மு.க வில் திருச்சி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்கள் எந்த மக்கள்நல  திட்டத்தையும் திருச்சிக்கு கொண்டுவரவில்லை. செந்தில் பாலாஜி சிறை சென்று விட்டார். அடுத்து கே.என்.நேரு தான் சிறைக்கு போக உள்ளார் என அ.தி.மு.க வினர் கூறிவருகிறார்கள். நாங்கள் சிறை செல்வது குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அ.தி.மு.க வினரை போல் பயப்பட மாட்டோம்.

நேரு

திமுகவிற்காக அமைச்சராகவும் இருப்பேன், சிறைக்கு செல்ல தயாராகவும் இருப்பேன். தி.மு.க வின்  தொண்டர்களை யாரும் மிரட்டி பார்க்க முடியாது என்றார். இந்த கூட்டத்தில் திமுகவினர், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web