அட்சய திருதியை தினத்தில் இதை செய்தால் செல்வம் பெருகும்!

 
இன்று அட்சய திருதியை இதை வாங்க மறக்காதீங்க!

இன்று அட்சய திருதியையன்று இந்த விஷயத்தை செய்தால், உங்களிடம் இருக்கும் செல்வம்  பெருகும். அது என்ன என்று பார்க்கலாம் வாங்க. கடவுளை வழிபடுவதற்கு எல்லா நாளும் நல்ல நாள் தான் என்றாலும் நம் கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட தினங்களில் செய்யும் சில செயல்களால் நம் சிரமங்கள் குறைந்து வளமான வாழ்வு பெறலாம். நட்சத்திரங்கள் மற்றும் திதிகளின் அடிப்படையிலேயே தான் காரியங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது நம் ஜோதிட வல்லுனர்களின் கூற்று. அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.

தானம்

அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” தினம் ரொம்பவே விசேஷம்.’அட்சயம்’ என்றால் வளர்வது, அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதிகம். அதனாலே தான் பொதுமக்கள் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

புத்தகம்

தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. தங்கம் வாங்க இயலாதவர்கள் வீட்டிற்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.அட்சய திருதியை தினத்தில் குழந்தைகளை படிக்க செய்வது முதலில் கல்வி கற்பித்தல் ஆகியவற்றை தொடங்கினால் கல்விச் செல்வம் பெருகும்.அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்தாலும் வீட்டில் அன்னப்பஞ்சம் நீங்கி வளமான செழிப்பான வாழ்க்கையை பெறலாம். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web