வைகாசி அமாவாசை முன்னிட்டு திருவண்ணாமலையில் இளையராஜா தரிசனம்!
![வைகாசி அமாவாசை முன்னிட்டு திருவண்ணாமலையில் இளையராஜா தரிசனம்!](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/7e8aff519caa49ccc2e99e48934ff47b.jpeg)
இன்று வைகாசி அமாவாசை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வைகாசி அமாவாசை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று வருகை தந்தார். அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்தார். அதன் பிறகு கோயில் சார்பில் அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோவிலில் இளையராஜா மண்டியிட்டு வழிபட்டார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!